/* */

கோவில்களில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

திண்டுக்கல்லில் உள்ள விநாயகர் மற்றும் ஐயப்பன் கோவில்களில், பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

HIGHLIGHTS

கோவில்களில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
X

திண்டுக்கல் கோவில் ஒன்றில் மாலை அணிந்து கொண்ட பக்தர்கள்.

கார்திகை மாதம் பிறந்துள்ள நிலையில், ஐயப்ப பக்தர்கள், ஒரு மண்டலம் விரதம் இருந்து மண்டல பூஜைக்கு செல்வது வழக்கம். அவ்வகையில், திண்டுக்கல்லில் ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து விரதத்தை தொடங்கி உள்ளனர். திண்டுக்கல் மலையடிவாரம் வட்டார ஐயப்பன் கோவிலில், இன்று அதிகாலையில் கொடியேற்றம், கணபதி பூஜையுடன் துவங்கியது.

இதனை தொடர்ந்து, திண்டுக்கல் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர், மாலை அணிந்து கொண்டு தங்கள் விரதத்தை துவங்கினர். எனினும், சபரிமலையில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, மாலை அணிந்து கொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை, இன்று மிகவும் குறைவாக காணப்பட்டது.

சபரிமலையில், 60 வயதிற்கு மேல் உள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால், அங்கு செல்ல முடியாத பக்தர்கள், திண்டுக்கல் மலைக்கோட்டை ஐயப்பன் திருக்கோவிலில் விரதத்தை பூர்த்தி செய்து, நெய் அபிஷேகம் செய்து கொள்ள, கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Updated On: 17 Nov 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  5. திருத்தணி
    திருத்தணி ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது
  6. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  7. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  8. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  10. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!