/* */

தருமபுாியில் 2ம் நாள் புத்தக திருவிழா: ஆர்வத்துடன் புத்தக வாசிப்பாளா்கள்

தருமபுாி புத்தக திருவிழாவில் 2ம் நாளாக ஆா்வத்துடன் பொதுமக்கள் புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.

HIGHLIGHTS

தருமபுாியில் 2ம் நாள் புத்தக திருவிழா: ஆர்வத்துடன் புத்தக வாசிப்பாளா்கள்
X

 புத்தக கண்காட்சியை இன்று 2ம் நாளாக ஏராளமானோர் பார்வையிட்டு புத்தகங்களை ஆா்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

தருமபுரி மாவட்டத்தில் தகடூர் புத்தக பேரவை சார்பில், புத்தக வாசிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் ஆண்டுதோறும் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக புத்தகத் திருவிழா மிகவும் எளிமையாக நடைபெற்றது.

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான புத்தகத் திருவிழா நேற்று முதல் நான்கு நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்தப் புத்தகத் திருவிழாவை தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து அரங்குகளில் வைத்துள்ள புத்தகங்களை பார்வையிட்டார்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக புத்தக கண்காட்சியை பார்வையிட புத்தக வாசிப்பாளர்கள் வருகை குறைவாக இருக்கும் என்பதால், இந்த ஆண்டு புத்தகத் திருவிழா எளிமையாகவே நடைபெற்று வருகிறது. இந்த புத்தகக் கண்காட்சியில் விடுதலை போராட்ட வீரர்கள், பல்வேறு அரசியல் தலைவர்கள், வரலாற்று அறிஞர்கள், அறிவியல், வரலாற்று நூல்கள், சிறுகதைகள், நாவல், பொது அறிவு, போட்டித் தேர்வைக்கான புத்தகம், குழந்தைகளுக்கான அறிவுத்திறன் பயிற்சி நூல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் சுமார் 10 அரங்குகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் நான்கு நாட்களில் தினம் ஒரு தலைப்பில் பல்வேறு எழுத்தாளர்கள், கவிஞர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளனர். இந்த புத்தக கண்காட்சியை இன்று 2ம் நாளாக ஏராளமானோர் வந்து பார்வையிட்டு புத்தகங்களை ஆா்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

Updated On: 24 Dec 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  2. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  3. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  4. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  6. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
  7. கோவை மாநகர்
    காந்திபுரத்தில் பேருந்து மோதி தொழிலாளி பலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...