அரியலூர் மாவட்டத்தில் மீனவ இளைஞர்களுக்கு குடிமைப் பணிகளுக்கான பயிற்சி
அரியலூர் மாவட்டத்தில் மீனவ இளைஞர்களுக்கு குடிமைப் பணிகளுக்கான ஆயத்த பயிற்சி அளிக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணியில் சேருவதற்கான போட்டித் தேர்வில் சிறப்பிக்க சென்னை, அகில இந்திய குடிமைப்பணிகளுக்கான பயிற்சி மையத்துடன் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணைந்து ஆண்டுந்தோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஆயத்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் வகுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அரியலூர் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், அறை எண்.234, 2வது மேல்தளம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், அரியலூர்-621704 அலுவலகத்தை அலுவலக வேலை நாட்களில் நேரில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.