/* */

மணல் குவாரி திறக்க கோரி சாலை மறியல்

மணல் குவாரி திறக்க கோரி சாலை மறியல்
X

அரியலூர் மாவட்டம் மதனத்தூர் கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் மணல் குவாரி திறக்கக் கோரி, நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகளில் தொழிலாளர்கள் காரைக்குறிச்சி பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரியலூர்- மாவட்டம் தா.பழூரை சுற்றி உள்ள கிராமங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் உள்ளன. இந்த மாட்டு வண்டி உரிமையாளர்களின் குடும்பங்கள் இதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை நம்பி வாழ வேண்டி உள்ளது. இவர்கள் அனைவரும் மதனத்தூர் கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் மணல் குவாரி திறக்க கோரி நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் அடிக்கடி இவர்கள் மாட்டுவண்டியில் திருட்டுத்தனமாக மணல்லோடு எடுத்து செல்லும்போது ரோந்து வரும் போலீசார் வழக்குபதிவு செய்து மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்வதால் இருதரப்பினருக்கும் தகராறு ஏற்படுகிறது.

எனுவே மதனத்தூர் கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் நிரந்தரமாக மணல் குவாரி திறக்கக் கோரி, நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகளில் தொழிலாளர்கள் காரைக்குறிச்சி பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஜெயங்கொண்டம்- கும்பகோணம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாட்டுவண்டிகளை சாலைகளின் ஓரத்தில் நிறுத்தசொல்லி போக்குவரத்தை சீர்செய்தனர். அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் ஏற்பாடு செய்துவருகின்றனர்.

Updated On: 8 March 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  2. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  3. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  4. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  5. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
  6. கோவை மாநகர்
    காந்திபுரத்தில் பேருந்து மோதி தொழிலாளி பலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  10. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!