சாத்தூர் அருகே வெடி விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி
சாத்தூர் அருகே வெடி விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி ரூ.16 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.
HIGHLIGHTS
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பட்டாசுதொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் 6 நபர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி ரூ.16 இலட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்.
சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை வட்டத்தில் உள்ள பனையடிப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ சோலை பயர் ஒர்க்ஸ் இண்டஸ்ட்ரீஸில் 05.01.2022 அன்று ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த வெம்பக்கோட்டை வட்டத்தில் விஜயகரிசல்குளம் (கி) பகுதியை சேர்ந்த செந்தில் வாரிசுதாரரான தங்கமாரி மற்றும் கருப்பசாமி வாரிசுதாரரான செல்வி கன்னக்குடும்பன்பட்டி (கி) பகுதியை சேர்ந்த காசி வாரிசுதாரரான பரமேஸ்வரி கொம்புலிங்கபுரம் (கி) பகுதியை சேர்ந்த அய்யம்மாள் வாரிசுதாரரான பவித்திரா மஞ்சள் ஓடைப்பட்டி (கி) பகுதியை சேர்ந்த முனியசாமி வாரிசுதாரரான முருகேஸ்வரி ஆகிய 5 நபர்களுக்கு தலா ரூ.3,00,000 த்திற்கான காசோலைகளையும், மேலும், வெடிவிபத்தில் காயமடைந்த வெம்பக்கோட்டை வட்டம் கொம்புலிங்கபுரம் (கி) பகுதியை சேர்ந்த சரஸ்வதி ரூ.1,00,000 த்திற்கான காசோலையையும் என ஆக மொத்தம் 6 நபர்களுக்கு ரூ.16 இலட்சத்திற்கான காசோலைகளை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி உதவியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி. வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காளிமுத்து, அலுவலக மேலாளர் (பொது) பரமானந்த ராஜா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.