தொடர்மழையால் முக்கிய வீதிகளில் தேங்கிய மழைநீர்
திருவண்ணாமலையில் பெய்து வரும் தொடர்மழையால் முக்கிய வீதிகளில் நீர் தேங்கியுள்ளது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் பல இடங்களில் மின் கசிவு மற்றும் மின்சாரம் தாக்கி பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. திருவண்ணாமலையில் நேற்று காலை முதல் இன்று அதிகாலை வரை மழை விட்டு விட்டு பெய்து வந்தது.
மழை விட்டுவிட்டு பெய்தாலும் அதிக அளவில் பெய்தது. அதன் காரணமாக திருவண்ணாமலை முக்கிய வீதியான தேரடி வீதியில் பல இடங்களில் மழைநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. அதன் காரணமாக மக்கள் நடக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவுவதாக சுகாதாரத்துறை அறிவித்திருந்த நிலையில், இது போன்ற சமயங்களில் தண்ணீர் தேங்குவது அதன் காரணமாக கொசுக்கள் உருவாவதும் டெங்கு காய்ச்சலை அதிகம் வருவதற்கு காரணமாகி விடும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
உடனடியாக நகராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்