Begin typing your search above and press return to search.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வருடாபிஷேக விழா
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று வருடாபிஷேக விழா நடைபெற்றது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் இன்று மகாகும்பாபிஷேக ஐந்தாம் ஆண்டு வருடாபிஷேகம், பிப்ரவரி மாதம் 2017 ஆம் ஆண்டு அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அது முதல் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் வருடாபிஷேக விழா நடைபெற்று வருகிறது. ஐந்தாம் வருடம் வருடாபிஷேகம் இன்று நடைபெற்றது. வருடாபிஷேக விழாவை முன்னிட்டு கோயிலிலுள்ள அனைத்து சன்னதிகளுக்கும் யாகசாலையில் இருந்து புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்கார தீபாரதனை நடைபெற்றது.
நகரத்தார்கள் சார்பில் நடைபெற்ற யாக பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.