திருவண்ணாமலையில் தேசிய கொடியை ஏற்றி நல திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்
தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் மரியாதையை ஆட்சியர் ஏற்றுக்கொண்டார்.
HIGHLIGHTS
75-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கலெக்டர் பி.முருகேஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து சமாதான புறாக்கள் வண்ண பலூன்களை வானில் பறக்க விட்டார்.
இதைத்தொடர்ந்து உழவர் பாதுகாப்பு திட்டம் விபத்து நிவாரணத் தொகை ப்பட்டா, பயிர் விளைச்சலில் முதல் பரிசு திரவ உயிர் உறவும் விசைத்தெளிப்பான் உட்பட 781 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 31 லட்சத்து 94,654 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல் அரசு துறை அதிகாரிகள் பொதுமக்கள் . ஆகியோர் கலந்து கொண்டனர்.