/* */

கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை: 2 மருந்து கடைகள் மீது வழக்குப்பதிவு

கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்த 2 மருந்து கடைகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

HIGHLIGHTS

கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை: 2 மருந்து கடைகள் மீது வழக்குப்பதிவு
X
பைல் படம்.

பொதுமக்களுக்கு டாக்டரின் பரிந்துரை சீட்டின் பேரில் மட்டுமே மருந்துகள் விற்பனை செய்ய வேண்டும். சட்டவிரோதமான கருக்கலைப்பு போன்ற நடவடிக்கைகளுக்கு மாத்திரைகள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் டாக்டர்கள் பரிந்துரையின்றி கருக்கலைப்பு மாத்திரை விற்ற இரண்டு மருந்து கடைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் சில மருந்து கடைகள் உள்ளிட்ட சில இடங்களில் டாக்டர் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து விற்பனை நடைபெறுவதாக புகார்கள் வந்தது. அதன்பேரில் மருந்து ஆய்வாளர்களால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட மருந்து கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது.

இதில் டாக்டரிகளின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்தது, கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டு 2 கடைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் மருந்து கடைகளுக்கு சீல் வைக்கப்படும்.

பொதுமக்கள் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட நோய்களின் போது தாமாக மருந்துகளை எடுப்பதை தவிர்த்து, டாக்டரின் ஆலோசனை பெற்று உரிய மருந்து சீட்டுடன் மருந்துகள் வாங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Updated On: 17 May 2022 1:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்