/* */

திருவண்ணாமலையில் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலையில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் சம்பத் தலைமை வகித்தார். சங்கத்தின் மாநில பொருளாளர் சேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கூட்டுறவு சங்க துணை பதிவாளர் மற்றும் பணியாளர்கள் விரோத போக்கை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் செயலாளர் பதவி உயர்வு நீங்களாக பணியாளர்களின் பதவி உயர்வை நிர்வாகம் வழங்கி வருவதை துணைப்பதிவாளர் அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் ,உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Feb 2022 6:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!