சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயல்பாடுகள் புகைப்படக் கண்காட்சி
சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயல்பாடுகள் புகைப்படக் கண்காட்சி மாவட்ட நீதிபதி திருமகள் தொடங்கி வைத்தார்.
HIGHLIGHTS
தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் திருவண்ணாமலை நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயல்பாடுகள் குறித்து புகைப்பட கண்காட்சியினை மாவட்ட நீதிபதி திருமகள் தொடங்கி வைத்து சட்டம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
அதைத்தொடர்ந்து சட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் நீதிமன்ற வளாகத்தில் புத்தக அரங்கினை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த மையத்தில் பொதுமக்கள் சட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு வருகின்ற 14ஆம் தேதி வரை கிராமங்கள் தோறும் சட்டம் மற்றும் அடிப்படை உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், நீதி துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.