/* */

பாஜக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

பிஜேபி பிரமுகர் வீட்டு வாசலில் முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சினர்.

HIGHLIGHTS

பாஜக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
X

திருவண்ணாமலை செங்கம் சாலை, ரமணா நகர், 3வது தெருவில், வசிக்கும் பிஜேபி தெற்கு மாவட்ட துணைத்தலைவர் அருணை ஆனந்தன். இவர் வீட்டு வாசலில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் வீட்டின் கதவை பலமாக தட்டியதாக சொல்லப்படுகிறது.

கீழே இறங்கி வந்த போது திடீரென மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு பாட்டலை வீட்டின் கதவு முன்பு வீசி விட்டு தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. பெட்ரோல் குண்டு சரியாக தீப்பற்றாததால் தெற்கு மாவட்ட பாஜக துணைத் தலைவர் அருணை அனந்தன் தீ காயங்கள் இன்றி உயிர் தப்பினார். மேலும் வீட்டின் முன்பும் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

சரியாக எரியாத நிலையில் இருந்த பெட்ரோல் குண்டை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் முன்விரோதம் காரணமாக இது நடந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

Updated On: 27 April 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு