/* */

வேங்கிக்கால் ஏரி உபரிநீர் செல்ல பாலம் அமைப்பு: அதிகாரிகள் ஆய்வு

வேங்கிக்கால் ஏரியில் இருந்து உபரிநீர் தடையின்றி செல்ல ரூ.1¼ கோடியில் சிறு பாலம் அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

HIGHLIGHTS

வேங்கிக்கால் ஏரி உபரிநீர் செல்ல  பாலம் அமைப்பு: அதிகாரிகள் ஆய்வு
X

வேங்கிக்கால் ஏரியில் இருந்து உபரிநீர் தடையின்றி செல்ல சிறு பாலம் அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், வேங்கிக்கால் ஏரி உள்ளது. கடந்த ஆண்டு பெய்த மழையின் போது, வேங்கிக்கால் ஏரி நிரம்பி மழைநீர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள சாலையில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

இதுமட்டுமின்றி வேங்கிக்கால் ஏரியில் வெளியேறிய உபரிநீர் மூலம் அவலூர்பேட்டை சாலை வழியாக சென்று திண்டிவனம் சாலையில் உள்ள நொச்சிமலை ஏரி நிரம்பி குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்தது. உபரிநீர் செல்வதற்கு போதிய கால்வாய் வசதி இல்லாததால் குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்தது என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவின் பேரில் திருவண்ணாமலை கோட்ட நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் மூலம், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து வேங்கிக்கால் ஏரியில் இருந்து உபரிநீர் தடையின்றி வெளியேறும் வகையில் ஏரியின் எதிரில் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் சிறிய பாலம் அமைக்கும் பணி தொடங்கியது.

அதுமட்டுமின்றி வேங்கிக்கால் ஏரியில் இருந்து உபரிநீர் செல்லும் வழிதடத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட பகுதியில் கல்வெட்டு அமைக்கும் பணிகளும் தொடங்கி உள்ளது. வேங்கிக்கால் ஏரி அருகில் சிறுபாலம் அமைக்கும் பணியை திருவண்ணாமலை கோட்ட நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் முரளி மற்றும் அதிகாரிகள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், உதவி பொறியாளர் கலைமணி, சாலை ஆய்வாளர் பச்சையப்பன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். அதிகாரிகள் கூறுகையில், 'பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இப்பணிகள் 2 மாதங்களில் நிறைவு பெறும்' என்றனர்.

Updated On: 12 May 2022 1:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்