நகையை ஏலம் விட்ட தேசிய வங்கி: இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு
Consumer Court Order நகையை ஏலம் விட்ட தேசிய வங்கி நிர்வாகம் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் கோர்ட் உத்தரவு.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த அணியாலையைச் சேர்ந்த விவசாயி பரந்தாமன், போளூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், 56 கிராம் நகையை அடமானம் வைத்து, 77 ஆயிரத்து, 700 ரூபாய் கடன் பெற்றார். இவர் 2019 மார்ச், 12ல் நகையை திரும்ப பெற, வட்டி மற்றும் அசல் தொகை செலுத்தினார். அப்போது, வங்கி ஊழியர்கள், உயர் அதிகாரி விடுமுறையில் சென்றதால், வேறொரு நாளில் வருமாறு தெரிவித்தனர். பத்து நாட்கள் கழித்து நகையை கேட்டபோது, பதில் கூறவில்லை.
Consumer Court Order
இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில், பரந்தாமன் விளக்கம் கேட்டபோது, அடகு வைக்கப்பட்ட அவருடைய நகை, ஏலம் விடப்பட்டது தெரிய வந்தது. திருவண்ணாமலை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அடகு வைத்த நகைக்கு ஈடாக, 2 லட்சத்து, 66 ஆயிரம் ரூபாய், பரந்தாமனுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு, 25 ஆயிரம் ரூபாய், வழக்கு செலவு 5,000 ரூபாய் ஆகியவற்றை, ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில், மேற்குறிப்பிட்ட தொகைக்கு உத்தரவு பிறப்பித்த தேதியிலிருந்து, 6 சதவீதம் வட்டி வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.