அருணாசலேஸ்வரர் கோவிலில் அர்ச்சகர் பயிற்சி மாணவர் சேர்க்கைக்கான நேர்காணல்
அருணாசலேஸ்வரர் கோவில் அர்ச்சக பயிற்சி பள்ளியில் சேர்வதற்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அர்ச்சக பயிற்சி பள்ளியில் சேர்வதற்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் தமிழகத்தில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்பட 6 கோவில்களில் திருக்கோவில் அர்ச்சகர் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள சக்தி விலாஸ் சபாவில் அர்ச்சகர் பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதற்கு 26 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமை தாங்கினார். உதவி ஆணையர் மகாலட்சுமி முன்னிலை வகித்தார். விண்ணப்பித்த 26 பேருக்கும் நேர்காணல் நடைபெற்றது. மேலும் பயிற்சி பள்ளிக்கான தலைமை ஆசிரியர் மற்றும் ஆகம ஆசிரியர்களுக்கான நேர்காணலும் நடைபெற்றது. கோவில் சிவாச்சாரியார்கள், அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர்.