/* */

தற்காலிகப் பேருந்து நிலையங்களில் முன்னேற்பாடுகள்: அரசுச் செயலா் ஆய்வு

தீபத் திருவிழாவுக்காக அமைக்கப்படும் தற்காலிகப் பேருந்து நிலையங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகளை, அரசு கூடுதல் தலைமைச் செயலா் ஆய்வு செய்தாா்.

HIGHLIGHTS

தற்காலிகப் பேருந்து நிலையங்களில் முன்னேற்பாடுகள்: அரசுச் செயலா் ஆய்வு
X

தற்காலிக பேருந்து நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவுக்காக அமைக்கப்படும் தற்காலிகப் பேருந்து நிலையங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகளை, அரசு கூடுதல் தலைமைச் செயலா் கே.பனீந்திர ரெட்டி ஆய்வு செய்தாா்.

அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா நவம்பா் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் சுமாா் 30 லட்சம் பக்தா்கள் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

எனவே, திருவண்ணாமலை நகரைச் சுற்றி 13 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இந்தப் பேருந்து நிலையங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள், அடிப்படை வசதிகள் குறித்து தமிழக போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் கே.பனீந்திர ரெட்டி வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, பக்தா்களுக்குத் தேவையான குடிநீா், கழிப்பறை வசதிகள், மின் விளக்கு வசதி ஆகியவற்றை உடனே செய்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அரசு அவா் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் முருகேஷ், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் மண்டல மேலாண்மை இயக்குநா் ராஜ்மோகன், நகராட்சிகளின் மண்டல நிா்வாக இயக்குநா் தனலட்சுமி, திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் மந்தாகினி, நகராட்சி ஆணையா் தட்சிணாமூா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.

தீபத்திருவிழாவுக்கு தற்காலிக பஸ் நிலையங்கள் விவரம் அறிவிப்பு

திருவண்ணாமலை தீப திருவிழாவை முன்னிட்டு வரும் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை செயல்பட உள்ள தற்காலிக பஸ் நிலையங்கள் எங்கெங்கு உள்ளது என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:

வேலூர் ரோடு- அண்ணா நுழைவு வாயில்: போளூர், வேலூர், ஆரணி, ஆற்காடு, செய்யாறு

அவலூர்பேட்டைரோடு – எஸ்ஆர்ஜிடிஎஸ் பள்ளி எதிரில் திறந்தவெளி திடல்: வந்தவாசி, காஞ்சிபுரம்

திண்டிவனம்ரோடு – ஒழுங்குமுறைவிற்பனைக்கூடம்: செஞ்சி, திண்டிவனம், புதுச்சேரி, தாம்பரம், அடையாறு,

கோயம்பேடு வேட்டவலம்ரோடு – சர்வேயர்நகர் திறந்த வெளி திடல்: வேட்டவலம், விழுப்புரம்

திருக்கோவிலூர் ரோடு – நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் மற்றும் அருணை மருத்துவக்கல்லூரி அருகில் மற்றும் வெற்றிநகர்: திருக்கோவிலூர், பண்ருட்டி, கடலூர், சிதம்பரம், கும்பகோணம், திட்டக்குடி, விருத்தாச்சலம், நாகப்பட்டினம், திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி

மணலூர்பேட்டைரோடு – செந்தமிழ்நகர் திறந்தவெளி திடல்: கள்ளக்குறிச்சி, தானிப்பாடி, சாத்தனூர்அணை

செங்கம்ரோடு – அத்தியந்தல் மற்றும் சுபிக்க்ஷா கார்டன் மைதானம்: தருமபுரி, திருப்பத்தூர், சேலம், பெங்களூர், ஓசூர், ஈரோடு, கோயம்புத்தூர்.

காஞ்சிரோடு – டான்பாஸ்கோ பள்ளி மைதானம்: மேல்சோழங்குப்பம் ஆகிய பகுதிகளில் தற்காலிக பஸ் நிலையங்கள் செயல்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 24 Nov 2023 1:18 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!