Begin typing your search above and press return to search.
அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் வர தடை விதித்துள்ள நிலையில் அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
HIGHLIGHTS
பவுர்ணமி கிரிவலம் வர தடை விதித்துள்ள நிலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பவுர்ணமி நாளான்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 5.20 மணிக்கு தொடங்கி 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5.51 மணி வரை உள்ளது.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு பவுர்ணமியன்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளதால் பக்தர்கள் கோவிலுக்கு வருகைதர வேண்டாம். இந்நாளில் ஆகம விதிகளின்படி அனைத்து பூஜைகளும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது