Begin typing your search above and press return to search.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் திறக்கப்பட்டது
பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர்.
HIGHLIGHTS
பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் வழிபட அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் அனைவரும் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நோய் அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
பக்தர்கள் கிருமி நாசினி பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்து கால்களை நீரில் சுத்தம் செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
முக கவசம் அணிந்து வரவேண்டும். தனி மனித இடைவெளியுடன் தரிசனம் செய்ய வேண்டும் என்று காவல்துறையினர் ஒலிபெருக்கியில் அறிவிப்புகளை செய்து கொண்டுள்ளனர். சாமி சிலை மற்றும் கோவில் பகுதிகளை தொடக்கூடாது. தேங்காய், பழம், பூ கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.