தீபத்திருவிழா பிரார்த்தனை உண்டியல் வைப்பு
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத்திருவிழா பிரார்த்தனை உண்டியல் வைப்பு
HIGHLIGHTS
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தங்க கொடி மரம் அருகே தீபத்திருவிழா பிரார்த்தனை உண்டியல் வைக்கப்பட்டது அதில் பக்தர்கள் ஆர்வமுடன் காணிக்கை செலுத்தினர்.
தீபத் திருவிழாவின் போது தங்க கொடி மரம் அருகே பிரார்த்தனை உண்டியல் அமைப்பது வழக்கம். அதில் குடும்பத்தில் வளம் பெருகவும், தொழில் செழிக்கவும், நேர்த்திக்கடன் செலுத்தவும், தீபத் திருவிழா பிரார்த்தனை உண்டியலில் காணிக்கை செலுத்துவது இக்கோயிலின் சிறப்பு மிக்க மரபாகும்.
அதன்படி வைக்கப்பட்டுள்ள காணிக்கை உண்டியலில் திருக் கோயில் இணை ஆணையர் அசோக்குமார், முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் தனுசு, மற்றும் ஜீவானந்தம், டி.வி.எஸ். ராஜாராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பிரார்த்தனை உண்டியலில் காணிக்கை செலுத்தினர்.
வரும் 18ஆம் தேதி வரை பிரார்த்தனை காணிக்கை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.