Begin typing your search above and press return to search.
திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் இன்று கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டத்தில் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் இன்று திருவண்ணாமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக அரசு வெளியிட்டுள்ள நிலையான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
கல்லூரி வளாகத்திலேயே மாணவர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். மாணவர்களிடத்தில் கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்
இந்த ஆய்வின்போது உதவி ஆட்சியர் கட்டா ரவி,அரசு கலைக் கல்லூரி முதல்வர், வருவாய் கோட்டாட்சியர், அரசு அலுவலர்கள், வட்டார மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.