/* */

திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் மகாதீபத்தை முன்னிட்டு இன்று காலை பரணி தீபம் ஏற்றப்பட்டது

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது
X

அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் பத்தாவது நாளான இன்று அதிகாலை நான்கு மணிக்கு அண்ணாமலையார் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது. இன்று மாலை 6 மணிக்கு தீப மலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

கார்த்திகை தீபத் திருவிழாவின் இறுதி நாளான இன்று காலை சரியாக நான்கு மணிக்கு சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது. ஏகன் அநேகனாகும் தத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் அண்ணாமலையார் சன்னதியில் ஏற்றப்பட்ட தீபம் கொண்டு வரப்பட்டு ஐந்து தனித்தனி மடக்குகளில் தீபங்கள் ஏற்றப்பட்டன.

சிவாச்சாரியர்கள் பரணி தீபத்தை எடுத்துக் கொண்டு அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன் ஆகிய சன்னதிகளுக்கு கொண்டு சென்ற பின் பக்தர்கள் தரிசனத்துக்காக கொடிமரத்தின் அருகில் தீபத்தை கொண்டு வந்தனர். பரணி தீபத்தை தரிசனம் செய்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என கோஷம் எழுப்பினர்.

Updated On: 19 Nov 2021 12:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...