/* */

திருவண்ணாமலை அருகே கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு

திருவண்ணாமலை அருகே பெண்ணிடம் 6 பவுன் சங்கிலியை பறித்து சென்ற 2 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை அருகே கோவிலுக்கு சென்ற பெண்ணிடம்  6 பவுன் சங்கிலி பறிப்பு
X

திருவண்ணாமலை புறவழி சாலை சகாய நகர் பகுதியை சேர்ந்தவர் ரவி, கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஜமுனா (வயது 55). இவர் நாவக்கரை பகுதியில் உள்ள ஓம்சக்தி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார்.

ஆடி மாதம் என்பதால் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி முடிந்து ஜமுனா இரவு சுமார் 10 மணி அளவில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

நாவக்கரை மெயின் ரோடு பகுதியில் ஜமுனா நடந்து வந்தபோது எதிரில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஜமுனாவின் கழுத்தில் இருந்த 6 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர்.

ஜமுனா திருடன், திருடன் என்று கூச்சலிட அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் சங்கிலியை பறித்த மர்ம நபர்கள் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.இதுகுறித்து ஜமுனா திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Updated On: 24 July 2022 6:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  2. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  3. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  4. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  5. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  6. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  7. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...
  9. வீடியோ
    Captain Vijayakanth-க்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது !#captain...
  10. லைஃப்ஸ்டைல்
    கண்முன்னே காணும் கடவுள், 'அம்மா'..!