/* */

திருவண்ணாமலைக்கு ரயில் மூலம் 2,660 மெட்ரிக் டன் யூரியா வருகை

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளின் தேவைக்காக 2,660 மெட்ரிக் டன் யூரியா ரயில் மூலம் வந்தடைந்தது.

HIGHLIGHTS

திருவண்ணாமலைக்கு ரயில் மூலம் 2,660 மெட்ரிக் டன் யூரியா வருகை
X

திருவண்ணாமலைக்கு ரயில் மூலம் வந்தடைந்த யூரியா மூட்டைகள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பயிரிட்டுள்ள வேளாண் பயிர்களுக்குத் தேவையான உரம் மற்றும் யூரியா தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க வேளாண்மை துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி காரைக்கால் துறைமுகத்திலிருந்து நடப்பு பருவத்துக்கு தேவையான 2660 மெட்ரிக் டன் யூரியா சரக்கு ரயில் மூலம் திருவண்ணாமலைக்கு வந்தடைந்தது.

பின்னர் அந்த யூரியா முட்டைகள் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் விற்பனை மையங்களுக்கு வேளாண் இணை இயக்குனர் மேற்பார்வையில் சரக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

இதைத் தவிர தனியார் உர விற்பனை நிலையங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 3,037 மெட்ரிக் டன் யூரியா, 880 மெட்ரிக் தொன் டி ஏ பி, 802 மெட்ரிக் டன் பொட்டாஷ், 4,470 தமிழ் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் ஆதார் எண்ணுடன் சென்று மன வள அட்டை பரிந்துரையின்படி பயிருக்குத் தேவையான உரங்களை பிஓஎஸ் இயந்திரம் மூலம் ரசீது பெற்று பயன்பெறலாம் என்று வேளாண்மைத் துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.

Updated On: 4 March 2022 2:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.