அழுகிய நிலையில் பெண் சடலம் கண்டெடுப்பு
திருவண்ணாமலையை அடுத்த சொரகொளத்தூர் காப்பு காட்டில் அடையாளம் தெரியாத பெண் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
திருவண்ணாமலையை அடுத்த சொரகொளத்தூர் காப்புக்காட்டில், துர்நாற்றம் வீசி வருகின்றது என்று அப்பகுதியில் ஆடு மேய்க்க சென்ற சிலர் கலசபாக்கம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் கலசபாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் உடம்பில் துணி இல்லாமல் அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
இது குறித்து மாவட்ட எஸ்பி., அரவிந்துக்கு அளித்த தகவலின் பேரில் எஸ்.பி., அரவிந்த் மற்றும் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் அசோக்குமார் ஆகியோர் சம்பவ இடத்தில் நேரில் பார்வையிட்டனர். முதற்கட்ட விசாரணையில் இறந்த பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்றும் மேலும் கற்பழித்து உடம்பில் துணியில்லாமல் கொலை செய்யப்பட்டாரா, டாஸ்மாக் கடைக்கு நேராக கொலை சம்பவம் நடந்துள்ளதால் குடித்துவிட்டு போதையில் இச்சம்பவம் நடந்துள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.