/* */

டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 8 தேர்வு; 922 பேர் 'ஆப்சென்ட்'

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று, 812 பேர் டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 8 தேர்வு எழுதினர்.

HIGHLIGHTS

டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 8 தேர்வு; 922 பேர் ஆப்சென்ட்
X

திருப்பூர் மாவட்டத்தில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் 8 தேர்வு நடந்தது.

தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் தேர்வுகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. நேற்று, குரூப்-8 தேர்வில் கிரேடு-4 செயல் அலுவலர்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி, பிஷப் உபகாரசாமி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்பட 7 மையங்களில் இந்த தேர்வு நடந்தது.

மொத்தம் 1,734 பேர் தேர்வு எழுதுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 922 பேர் தேர்வு எழுத வரவில்லை. 812 பேர் மட்டுமே தேர்வு எழுதினார்கள். இதன்படி 46.83 சதவீதம் பேர் தேர்வு எழுதி உள்ளனர்.

மாவட்ட கல்வித்துறை சார்பில் தேர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தேர்வையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 12 Sep 2022 5:55 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...
  2. லைஃப்ஸ்டைல்
    பிறை காணும் பெருநாளுக்கு வாழ்த்துச் சொல்வோமா..?
  3. வணிகம்
    இந்திய மசாலாப் பொருட்களின் மீது உணவுப் பாதுகாப்பு அமைப்பின் புதிய...
  4. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  5. கோவை மாநகர்
    வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
  6. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...
  7. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  8. காஞ்சிபுரம்
    பிறந்த 3 மணி நேரத்திற்குள் சாலையில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை
  9. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  10. காஞ்சிபுரம்
    அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு