வாகன ஓட்டிகளுக்கு மாஸ்க்குகள் வழங்கல்
திருநெல்வேலியில் பேஸ்புக் நண்பர்கள் குழு சார்பில் வாகன ஓட்டிகளுக்கு மாஸ்க் வழங்கப்பட்டது.
பேஸ்புக் நண்பர்கள் குழு சார்பில் திருநெல்வேலி பேட்டையில் இன்று காலை வாகன ஓட்டிகளுக்கு மாஸ்க் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நெல்லை டவுன் காவல் உதவி ஆணையர் சதீஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாகன ஓட்டிகளுக்கு மாஸ்க்குகளை வழங்கினார். தொடர்ந்து காவல் உதவி ஆணையர் சதீஷ்குமார் கூறுகையில் கொரோனா என்ற கொடிய நோயிலிருந்து தப்பித்துக்கொள்ள கட்டாயம் அனைவரும் மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் பேட்டை சிறப்பு சப் இன்ஸ்பெக்டகள் ஹரிஹர சண்முகம், ஆறுமுகம், பாளையங்கோட்டை சமாதானபுரம் தொழிலதிபர் முருகப்பன், ரெட்சோன் கணபதி மாரியப்பன், அன்னை தெரசா பொது நல அறக்கட்டளை இயக்குனர் மகேஷ், டேனியல் ஆசீர், பேட்டை பவுல் சவேரிராஜ், பேஸ்புக் நண்பர்கள் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.