/* */

நெல்லையில் தொடர் மழையால் சேதமான சாலையில் சிக்கி லாரி கவிழ்ந்து விபத்து

நெல்லையில் தொடர் மழையால் சேதமான சாலையில் சிக்கி நிலக்கரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

HIGHLIGHTS

நெல்லையில் தொடர் மழையால் சேதமான சாலையில் சிக்கி லாரி கவிழ்ந்து விபத்து
X

நெல்லை நயினார்குளம் சாலையில் நிலக்கரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நெல்லையில் பெய்து வரும் தொடர் மழையால் சேதமான சாலையில் சிக்கி நிலக்கரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், நெல்லையில் பரவலாக மழை பெய்து வருவதால் நெல்லை மாநகர பகுதிகளில் சாலைகள் பெரும் சேதமடைந்துள்ளது. மேலும் நெல்லை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருவதால், ஆங்காங்கே தோண்டப்பட்ட குழிகள் சரிவராத நிலையில் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

அவ்வபோது சிறு விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து ஆலங்குளம் பகுதிக்கு நிலக்கரி ஏற்றி வந்த லாரி குண்டும் குழியுமான சாலையில் சிக்கி கவிழ்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. லாரியில் ஏற்றப்பட்ட நிலக்கரியை வேறு வண்டிக்கு மாற்றும் பணியில் ஊழியர்கள் மேற்கொண்டனர்.

நெல்லை மாநகரப் பகுதியில் மிக முக்கியமான நயினார்குளம் சாலையில் நிலக்கரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனடியாக போர்க்கால அடிப்படையில் சேதமான சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Updated On: 2 Nov 2021 4:57 PM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  2. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  3. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...
  4. இந்தியா
    நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய 7 வழி...
  5. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  6. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...
  7. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  8. அரசியல்
    மத்தியில் ஆட்சி அமைக்க மெஜாரிட்டி கிடைத்து விட்டது: அமித்ஷா பேச்சு
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  10. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா