தடைக்கால நிவாரண நிதி உடனடியாக வழங்க தூத்துக்குடி மீனவர்கள் கோரிக்கை
தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டு உள்ளது.
HIGHLIGHTS
தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் 265 விசைப்படகுகள் இதனால் கடலுக்கு செல்லவில்லை. இதன் காரணமாக 5 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது. கொரோனா ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டிருப்பதால் வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் தடைகாலம் நிறைவடைந்து விசைப்படகுகள் தொழிலுக்காக கடலுக்கு செல்வதும் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.
இந்நிலையில் தமிழக அரசால் வழங்கப்படும் மீன்பிடி தடைகால நிவாரண தொகையும் இதுவரை மீனவர்களுக்கு வழங்கப்படவில்லை என மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஏற்கனவே, கொரோனா பாதிப்பு மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மார்ச் மாதம் முதலே மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில் மீனவர்கள் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது. அதனால், அரசு உடனடியாக இதனை கவனத்தில் கொண்டு நிவாரண தொகையை விரைவில் வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்ததுள்ளனர்.