ராஜீவ்காந்தி பிறந்தநாள்:77 ஆட்டோக்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கிய காங்கிரஸார்
ராஜீவ்காந்தியின் 77-ஆவது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் 77 பேருக்கு பெட்ரோல் டீசல் வழங்கப்பட்டதாக காங்கிரஸார் தெரிவித்தனர்.
HIGHLIGHTS
தூத்துக்குடியில் 77 ஆட்டோ டிரைவர்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கி மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 77-ஆவது பிறந்த நாளை காங்கிரசார் நூதனமுறையில் கொண்டாடினர்.
தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 77-ஆவது பிறந்த நாள் விழா புதுகிராமத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ். முரளிதரன் தலைமையில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ்காந்தியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் 77 ஆட்டோ டிரைவர்களுக்கு காங்கிரஸ் சார்பில் பொட்ரோல், டீசல் வழங்கப்பட்டது.
பின்னர், மோடி தலைமையிலான மத்திய பாஜ.க அரசு பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாக உயர்த்தி வருகிறது. இதனால் பொதுமக்கள், கார், ஆட்டோ டிரைவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். இந்த விலை உயர்வினால் ஆட்டோ ஓட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் ராஜீவ் காந்தியின் 77-ஆவது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் டீசல் வழங்கப்பட்டதாக மாவட்ட தலைவர் சி.எஸ். முரளிதரன் தெரிவித்தார்.
இதில், மண்டல தலைவர்கள் ஜசன்சில்வா, சேகர், செந்தூர்பாண்டி, மாவட்ட எஸ்சி எஸ்டி பிரிவு மாவட்ட தலைவர் ராஜாராம், மகிளா காங்கிரஸ் மண்டல தலைவி சாந்தி, மாவட்ட துணை தலைவர்கள் அருணாச்சலம், மடத்தூர் தனபால், அங்குசாமி, மாவட்ட செயலாளர்கள் கோபால், முனியசாமி, கதிர்வேல், அசனர், ஜெபராஜ், வார்டு தலைவர்கள் முத்துராஜ், மகாலிங்கம், முத்துவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.