/* */

வாக்கு எண்ணும் மையத்திற்கு பூட்டி சீல் வைப்பு

வாக்கு எண்ணும் மையத்திற்கு பூட்டி சீல் வைப்பு
X

திருவாரூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டு அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று முடிவடைந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைத்து சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட திருவாரூர், திருத்துறைப்பூண்டி ,நன்னிலம், மன்னார்குடி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருவாரூர் நாகை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையமான திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.இந்த வாக்கு எண்ணும் மையம் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பில் உள்ளது. 120 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் . சிசிடிவி கேமராக்கள் பொருத்தியும், உயர் கோபுரங்கள் அமைத்தும் முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது .

Updated On: 7 April 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  2. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  3. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  4. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  6. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  7. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  8. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  9. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  10. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு