தஞ்சை மாநகராட்சியில் 05 மையங்களில் 750 பேருக்கு தடுப்பூசி
தஞ்சை மாநகராட்சியில் இன்று 05 மையங்களில் 750 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட உள்ளதாக மாநகராட்சி அறிவிப்பு.
HIGHLIGHTS
தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு மையங்களில் தடுப்பூசியின் கையிருப்பை பொருத்து பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இன்று 05 மையங்களில் 750 நபர்களுக்கு தடுப்பூசி போடப்படுவதாகவும், தடுப்பூசி கையிருப்பு குறைந்த அளவே இருப்பதால் முதலில் வரும் பொதுமக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பழைய வீட்டு வசதிவாரிய குடியிருப்பில் 200 நபர்களுக்குக்கும், வண்டிக்காரத்தெரு மாநகராட்சி பள்ளியில் 150 நபர்களுக்கும், அரசு ஐடிஐ -யில் 150 மாணவர்கள் மற்றும் ஆசியர்களுக்கும், பாரத வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் 150 என மொத்தம் 4 மையங்களில் 550 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், கரந்த் மாநகராட்சி பள்ளியில் 200 நபர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியும் போடப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.