கோயிலில் முதியவர் உள்ளிருப்பு போராட்டம்
தஞ்சையில் கோவில் சுற்றுச்சுவரை இடித்து கேட் அமைத்ததை கண்டித்து முதியவர் ஒருவர் கோவிலில் அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டம்
HIGHLIGHTS
தஞ்சையில் கோவில் சுற்றுச்சுவரை இடித்து தனிநபர் கேட் அமைத்ததை கண்டித்து முதியவர் ஒருவர் கோவிலில் அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை வெண்ணாற்றங்கரையில் மணிகுன்ற பெருமாள் கோவில் உள்ளது. இது அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில். இந்நிலையில் இக்கோவிலின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதியை இடித்து தனிநபர் ஒருவர் கேட் அமைத்து இருந்தார். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கிரிஜா சங்கர் (62) என்பவர் சுற்றுச்சுவரைக் மீண்டும் கட்டி பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கோவிலில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்த மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். சுற்றுச் சுவர் கட்டப்பட்டு வருகிறது. போராட்டத்தை கைவிடுங்கள் என்று தெரிவித்தனர். இருப்பினும் கிரிஜா சங்கர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.