தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் பெண்கள் தின விழா கொண்டாட்டம்
தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் பெண்கள் தின விழா கொண்டாடப்பட்டது.
HIGHLIGHTS
அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தென்காசி சர்வதேச மகளிர் தின விழா நேற்று மருத்துவமனையில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
இதில் சுகாதார நல பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் பிரேமலதா அவர்கள் தலைமை தாங்கினார் . சிறப்பு விருந்தினர்களாக மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு இரா ஜெஸ்லின், உறைவிட மருத்துவர் ராஜேஷ், உதவி உறைவிட மருத்துவர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர் .
மூத்த மருத்துவர் லதா, மருத்துவர் கீதா, செவிலியர் கண்காணிப்பாளர்கள் பிச்சைவடிவு, பத்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவர் சுவர்ணலதா வரவேற்புரை ஆற்றினார்.
இணை இயக்குனர் அவர்கள் பணியாளர்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து சிறப்புரை ஆற்றினார் .
மருத்துவமனை கண்காணிப்பாளர் அவர்கள் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து பேருரை ஆற்றினார் இதில் மார்ச் 8ம் தேதி உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து மகளிர் சேர்ந்து கேக் வெட்டி சர்வதேச மகளிர் தினத்தை சந்தோசமாக கொண்டாடினர்.
மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர்கள் மூலம் பெண்கள் பற்றிய விழிப்புணர்வு பாடல்கள், கவிதைகள் வாசித்தனார். ஆலடி அருணா செவிலியர் பயிற்சி மற்றும் மருந்தாளுனர் பயிற்சி பெண்கள் நடனம் ஆடி விழாவை கலகலப்பாக்கினர். நிகழ்ச்சியின் முடிவில் செவிலியர் கண்காணிப்பாளர் இராஜாத்தி ஜெகதா நன்றியுரை வழங்கினார், இந்நிகழ்ச்சியினை செவிலியர் உமா மஹேஸ்வரி அவர்கள் தொகுத்து வழங்கினார்.