/* */

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றகை

தென்காசி நகராட்சிக்குட்பட்ட 10-வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் கேட்டு நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை.

HIGHLIGHTS

தென்காசி நகராட்சியில் அடிப்படை வசதிகள் கேட்டு நகராட்சி அலுவலகம் முற்றுகை.

தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சிக்குட்பட்ட 10-வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் கேட்டு அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் நகர்மன்ற உறுப்பினரும், தமுமுக மாவட்டச் செயலருமான முகமது சலீம் தலைமை தாங்கினார்.

10-வது வார்டு பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு இரண்டு மாத காலமாக பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மிகுந்த இடையூறு ஏற்பட்டுள்ளது. தற்போது மழை பெய்வதால் தோண்டப்பட்ட சாலைகளில் தண்ணீர் நிரம்பி குளம் போல் காட்சியளிக்கிறது.

இப்பகுதியில் உடைந்த பாலத்தை சரி செய்ய வேண்டும். வடிகால் நீரோடை உடைப்பு ஏற்பட்டு தெரு பகுதிகளுக்குள் தேங்கி சகதியாக காட்சியளிக்கிறது. அதனை உடனே சரிசெய்ய வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமுமுக-வினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 9 Nov 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனி, சோத்துப்பாறையில் கொட்டித்தீர்த்த மழை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருநெல்வேலி
    தாமிரபரணி நதிக்கரையில் வைகாசி ஆரத்தி பெருவிழா!
  5. நாமக்கல்
    வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி சிபிஎஸ்இ தேர்வுகளில் சாதனை
  6. வந்தவாசி
    வந்தவாசி அருகே நள்ளிரவில் தொடர் மின் தடை: பொதுமக்கள் மறியல்
  7. திருவண்ணாமலை
    பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட மூன்று பேர் கைது!
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  10. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...