Begin typing your search above and press return to search.
தென்காசியில் கஞ்சா விற்பனை செய்ய வந்த இருவர் கைது - போலீஸ் அதிரடி
தென்காசியில் கஞ்சா விற்பனை செய்ய வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
தென்காசி நகர் பகுதியில் அதிக அளவில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர் கற்பக ராஜா மற்றும் தனிப் பிரிவு தலைமை காவலர் முத்துராஜ் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர், தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். தென்காசி ஆயிரப்பேரி செல்லும் சாலையில் வாகன சோதனையின்போது, இருசக்கர வாகனத்தில் வந்த சந்தேகத்திற்கிடமான இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், ஆயிரப்பேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன் மற்றும் ஆயிரப்பேரி காந்தி காலனியைச் சேர்ந்த முத்துராஜ் என்பதும் தெரியவந்தது. அவர்கள், தென்காசி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ய கடத்திச் சென்றதும் தெரியவந்தது இதை தொடர்ந்து, இருசக்கர வாகனம் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர்.