Begin typing your search above and press return to search.
கொலைவழக்கில் கைதான வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டார்
அரக்கோணம் அருகே கொலை வழக்கில் கைதாகி சிறையிலிருக்கும் வாலிபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க கலெக்டர் உத்தரவு
HIGHLIGHTS
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் அரக்கோணம் அடுத்த மோசூரைச் சேர்ந்த சந்தோஷ் ,(22) என்ற வாலிபரை அரக்கோணம் நகரப் போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
இந்நிலையில் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்தியன் , குற்ற செயல்களைக் கட்டுப்படுத்தும் விதமாக சந்தோஷைகுண்டர் தடுப்புசட்டத்தின்கீழ் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் , சந்தோஷை குண்டர்தடுப்பு சட்டத்தின் கீழ் ஓராண்டுகாலம் சிறையிலடைக்க உத்தரவிட்டுட்டார்..