/* */

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுகவிற்கு வாக்களியுங்கள்: எம்எல்ஏ பேச்சு

வாக்குறுதிகளை படிப்படியாக முழுமையாக நிறைவேற்றுவதற்கு உள்ளாட்சி அமைப்புகளின் ஒத்துழைப்பு அவசியம்

HIGHLIGHTS

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுகவிற்கு வாக்களியுங்கள்: எம்எல்ஏ பேச்சு
X

மாவட்ட ஊராட்சி ஒன்பதாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை தேர்தல் பிரச்சாரம்

திமுக அரசு தேர்தலில் அளித்துள்ள வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென, கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை வலியுறுத்தினார்.

புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி 9-ஆவது வார்டுக்கான இடைத்தேர்தல் வருகின்ற அக்டோபர் 9 -ஆம் தேதி நடைபெறவுள்ளது. கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இந்த வார்டில், திமுக சார்பில் கை.பழனிச்சாமி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்குகள் சேகரித்தார்.

அவர் பேசும்போது, தமிழக முதல்வர் பல நல்ல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். தேர்தலில் அளித்துள்ள வாக்குறுதிகளை படிப்படியாக முழுமையாக நிறைவேற்றுவதற்கு, உள்ளாட்சி அமைப்புகளின் ஒத்துழைப்பு அவசியம். அந்த வகையில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் கை.பழனிச்சாமியை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெறச்செய்ய வேண்டும். இந்தப் பகுதி மக்களின் கோரிக்கைகள் என்ன என்பதை நான் நன்கு அறிவேன். பல கிராம்ஙகளில் குடிநீர், சாலை வசதிகள் இன்றும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை அவற்றையெல்லாம், நீங்கள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினராக தேர்வு செய்யவுள்ள வை.பழனிச்சாமியுடன் இணைந்து நிறைவேற்றுவோம் என்றார்.

பணிக்கொண்டான் பட்டியில் தொடங்கிய பிரசாரம் துடையூர், முத்துக்காடு, வேங்கை வயல், காவேரிநகர், கிளியூர், பூங்குடி, வெள்ளனூர், முத்துடையான்பட்டி, வடசேரிப்பட்டி, தாவூதுமில், காமராஜநகர், ரெங்கம்மாள் சத்திரம், மேலூர், இரும்பாளி, புதுப்பட்டி, மெய்வழிச்சாலை, சத்தியமங்கலம், பொம்மாடிமலை, நாத்தாமலை, அம்மாச்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வழியாக கோப்பிக்காட்டில் நிறைவடைந்தது.

பிரச்சாரத்தில், திமுக ஒன்றியச் செயலாளர் மாரிமுத்து, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம், ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.சுப்பையா மற்றும் பாரிவள்ளல், எம்.ஜோஷி, ஆர்.சி.ரெங்கசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 30 Sep 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...