திருவப்பூர் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவிலில் பூ பிரிக்கும் நிகழ்வு
புதுக்கோட்டை திருவப்பூர் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவை தொடர்ந்து பூ பிரிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
HIGHLIGHTS
புதுக்கோட்டையில் புகழ்பெற்ற இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மாசி மகத் திருவிழா, நேற்று பூச்சொரிதல் விழா தொடங்கியது. அதில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் பக்தர்கள் பூக்களைக் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் கொண்டு வந்து வைத்தனர்.
இதனை சிவாச்சாரியர்கள் கருவறை முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு கருவறையில் பூட்டி வைத்து, பின்னர் காலையில் கோவில் அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன்பிறகு பொதுமக்களுக்கு பூவை பிரித்து கொடுத்தனர்.
இந்நிகழ்வில் அமைச்சர் ரகுபதி மற்றும் கோயில் நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இன்றைய பூ பிிரிக்கும் நிகழ்ச்சியைக் காண்பதற்காக புதுக்கோட்டை நகர பகுதியில் மற்றும் மாவட்டத்தில் இருந்து பல்வேறு இடங்களிலும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.