/* */

புதுக்கோட்டையில் அரசு பள்ளிகளில் எம்எல்ஏ முத்துராஜா ஆய்வு

பள்ளி மாணவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்தியதுடன் பள்ளி வளாகத்தில் தேங்கிய நீரை வெளியேற்ற உத்தரவிட்டார்

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் அரசு பள்ளிகளில்  எம்எல்ஏ முத்துராஜா ஆய்வு
X

புதுக்கோட்டை அருகே அரசுப் பள்ளியை ஆய்வு செய்த எம்எல்ஏ முத்துராஜா

புதுக்கோட்டை தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் எம்எல்ஏ முத்துராஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேலாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக பள்ளிகள் விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில், இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை பெய்யாததால் பள்ளிகள் திறக்கப்பட்டன.

இதனையடுத்து, இன்று புதுக்கோட்டை அடுத்த கறம்பக்குடி தெற்கு ஒன்றியத்திற்குள்பட்ட, மழையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்திற்குள் மழைநீர் தேங்கியது. இது குறித்து தகவலறிந்த புதுக்கோட்டை எம்எல்ஏ- டாக்டர் முத்துராஜா அப்பகுதிக்கு சென்று பள்ளியை நேரில் பார்வையிட்டார். மேலும் பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்தினார். பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நிகழ்வில், கறம்பக்குடி தாசில்தார் விஸ்வநாதன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் குமரவேல், ஆயிஷா ராணி, வேளாண்துறை அதிகாரி லூர்து ராயப்பன் மற்றும் அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Updated On: 11 Nov 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது