/* */

விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அனுமதி வழங்க கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

இந்து முன்னணியினர் மற்றும் விநாயகர் வேடம் அணிந்த பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

HIGHLIGHTS

விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அனுமதி வழங்க கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
X

விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தமிழக அரசு அனுமதி வழங்க கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

விநாயகர் சதுர்த்தி விழாவின்போது சாலை ஓரங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபட அனுமதி வழங்காத தமிழக அரசை கண்டித்து ,புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோயில் முன்பாக விநாயகர் வேடம் அணிந்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விநாயகர் சதுர்த்தியின் போது வீடுகளில் மட்டும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவேண்டும் சாலை ஓரங்களில், வீதியிகளில் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபடக்கூடாது. விநாயகர் சதுர்த்தி விழாவின் போது, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, புதுக்கோட்டையில் இந்து முன்னணி சார்பில் புதுக்கோட்டை சாந்தநாதசுவாமி திருக்கோயில் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் மற்றும் விநாயகர் வேடம் அணிந்த பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் , டாஸ்மாக் கடைகளைத் திறக்கலாம், பிற மதங்களுக்கு வழிபாடு நடத்த அனுமதி உண்டு.ஆனால், இந்துக்கள் விநாயக சதுர்த்தியை கொண்டாடுவதற்கு மட்டும் அனுமதி கிடையாதா என்று தமிழக அரசை கண்டித்து முழக்கமிட்டனர்.

Updated On: 2 Sep 2021 9:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது