Begin typing your search above and press return to search.
போக்குவரத்து காவலரை இளைஞர் அடித்ததால் பரபரப்பு
புதுக்கோட்டையில் போக்குவரத்து காவலரை அடித்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை கீழராஜ வீதியில் மாஸ்க் அணியாமல் மோட்டார்பைக்கில் வந்தவர்களிடம் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வந்து கொண்டிருந்தனர். அப்போது மோட்டார்பைக்கில் மதுபோதையில் வந்த ஒரு இளைஞர் போக்குவரத்து காவலரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டரை மதுபோதையில் இருந்த இளைஞர் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் அந்த போக்குவரத்து காவலருக்கும் அந்த இளைஞருக்கும் கைகலப்பு ஏற்படுகிறது அந்த இளைஞரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.நகர பகுதியில் இளைஞர் ஒருவர் காவலரை அடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.