Begin typing your search above and press return to search.
கனமழை எதிரொலி: புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
தொடர் மழையின் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என ஆட்சியர் அறிவிப்பு.
HIGHLIGHTS
வடகிழக்கு பருவமழை தொடங்கிய காரணத்தினால் புதுக்கோட்டை மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் தொடர் மழையின் காரணமாக பள்ளிகள் விடுமுறை விடப்பட்டு வந்த நிலையில் புதுக்கோட்டையில் தொடர்ந்து இரண்டு நாட்கள் பெய்த கன மழையில் பள்ளிகள் விடுமுறை இல்லாமல் இருந்து வந்த நிலையில் இன்று காலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருவதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தொடர் மழையின் காரணமாக புதுக்கோட்டையில் பள்ளிகளுக்கு விடுமுறை என ஆட்சியர் அறிவிப்பு.