நவீன இயந்திரங்கள் மூலம் சீமைக்கருவேல மரங்கள் வேருடன் அகற்றம்
Prosopis Juliflora in Tamil-புத்தூர் ஏரியில் நவீன இயந்திரங்களின் மூலம் சீமைக் கருவேல் மரங்களை வேருடன் அகற்றும் பணியை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS
Prosopis Juliflora in Tamil-நாமக்கல் மாவட்டத்தின் பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில், நம்ம நாமக்கல் பசுமை நாமக்கல் என்ற திட்டம் கடந்த ஆண்டு துவங்கப்பட்டு பல்வேறு அரசு துறைகளின் சார்பாக இதுவரை 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் நீர்வளத்துறையின் ஏரிகளில் ஆக்கிரமித்துள்ள சீமைகருவேல் மரங்களை முற்றிலும் அகற்றி கரைகளை பலப்படுத்திடவும் நீர் ஆதாரத்தை பெருக்கிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இதையொட்டி, திருச்செங்கோடு தாலுக்காவில் 311 ஏக்கர் பரப்பளவில் உள்ள புத்தூர் ஏரியில் சீமைகருவேல் மரங்களை நவீன இயந்திரங்களின் மூலம் வேருடன் அகற்றும் பணியினை கலெக்டர் துவக்கி வைத்தார். இந்த பணிகளின் போது அகற்றப்படும் மரங்கள் வேருடன் தூளாக்கும் இயந்திரம் மூலம் முற்றிலும் தூளாக்கப்படுகின்றது.
இதன் காரணமாக வேர் பகுதிகளில் இருந்து புதிதாக மரம் முளைக்க வாய்ப்பு இல்லை இப்பணிகளை தொடர்ந்தும், விரைந்தும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். நிகழ்வில் திருச்செங்கோடு ஆர்டிஓ இளவரசி, தாசில்தார் அப்பன்ராஜ், பசுமை நாமக்கல் திட்ட தொடர்பு அலுவலர் ராஜேஸ் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2