சர்வே குளறுபடியால் கொல்லிமலையில் பழங்குடியின மக்கள் பாதிப்பு
கொல்லிமலையில் நடைபெற்ற ரீ சர்வே குளறுபடியால், பழங்குடியின மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், அதை சரி செய்ய கோரி கலெக்டரிடம் கோரிக்கை.
HIGHLIGHTS
கொல்லிமலையைச் சேர்ந்த, 14 பஞ்சாயத்துக்களின் சார்பில் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில், 14 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன. இங்கு பரம்பரையாக மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். கிராம நிலங்களை 1989 முதல் 1995 வரை ரீ சர்வே செய்யப்பட்டது. அதில் பல்வேறு பட்டா நிலங்கள் அனுபவம் ஒருவரிடமும் பெயர் மாறுபட்டும் உள்ளது. அதேபோல், பட்டா நிலங்களை தரிசு நிலங்களாக ரீ சர்வே செய்து மாற்றி விட்டனர். அதனால், மக்களிடையே பல்வேறு பிரச்சினைகள் உருவாகி உள்ளது. மேலும், அடிக்கடி இது சம்மந்தமாக சண்டை ஏற்பட்டு சட்ட ஒழுங்கு பிரச்சினை உருவாகிறது.
ரீ சர்வே என்ற பெயரில் தப்பான கணக்ககளை வைத்துக் கொண்டு, வேறு பத்திர கிரையம் செய்து வருகின்றனர். அதனால், பழங்குடியின மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தற்போது, கூட்டுறவு சங்கங்கள், பேங்குகளில் விவசாய கடன் பெறமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பழங்குடியினர் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, ரீ சர்வே குளறுபடிகளை சரி செய்து புதிதாக முறைப்படி சர்வே செய்து கம்ப்யூட்டர் மயமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.