தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தேர்வு
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக, நாமக்கல் வருவாய் மாவட்ட பொறுப்பாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது.
HIGHLIGHTS
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக, நாமக்கல் வருவாய் மாவட்டம் மற்றும் நாமக்கல், திருச்செங்கோடு கல்வி மாவட்ட பொறுப்பாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாமக்கல்லில் நடைபெற்றது.
திருச்சி மண்டல செயலாளர் உதயகுமார், தேர்தல் ஆணையராக செயல்பட்டார். முன்னாள் மாநில அமைப்புச் செயலாளர் புஷ்பராஜ் தலைமையில், மாவட்டத் தலைவர் ஜெகதீசன் முன்னிலையில், பொறுப்பாளர்கள், ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நாமக்கல் மாவட்ட தலைவராக என்.புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முதுநிலை வேதியியல் ஆசிரியர் காளிதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலாளராக கரிச்சிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுநிலை தமிழ் ஆசிரியர் இளங்கோவன், பொருளாளராக நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முதுநிலை விலங்கியல் ஆசிரியர் குமரேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும், அமைப்புச் செயலாளராக திருச்செங்கோடு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுநிலை தாவரவியல் ஆசிரியர் அருள்தாஸ், தலைமையிட செயலாளராக எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதுநிலை தமிழாசிரியர் செந்தில்குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மகளிரணி செயலாளராக, கோனூர் அரசு மேல்நிலைப் பள்ளி முதுநிலை தமிழ் ஆசிரியை லதா மற்றும் நாமக்கல், திருச்செங்கோடு கல்வி மாவட்ட நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.