/* */

மோகனூரில் ஐஸ் கட்டியுடன் கோடை மழை: பொது மக்கள் மகிழ்ச்சி

மோகனூரில் ஐஸ் கட்டியுடன் கோடை மழை பெய்ததால், வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

HIGHLIGHTS

மோகனூரில் ஐஸ் கட்டியுடன் கோடை மழை: பொது மக்கள் மகிழ்ச்சி
X

பைல் படம்

நாமக்கல் மாவட்டத்தில், கடந்த ஒரு மாதமாக வெய்யிலின் தாக்கத்தால், நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 100 டிகிரியைத் தாண்டி வெப்பம் நிலவுகிறது. பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள் முடங்கிவிடுகின்றனர்.

இந்த நிலையில் 9ம் தேதி மாலை 4 மணியளவில் மோகனூர் பகுதியில், மேகங்கள் திரண்டு திடீரென மழை பெய்யத்துவங்கியது. இடி, மின்னலுடன் ஐஸ் கட்டி மழை பெய்தது. பெரியவர்கள் ஆச்சரியத்துடன் கோடை மழையை பார்த்து ரசித்தனர். சிறுவர்கள் ஐஸ் கட்டி மழையை கையில் பிடித்து விளையாடி மகிழ்ந்தனர். கன மழையால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.

காற்று வேகமாக அடித்ததால் மோகனூர் பகுதியில் சுமார் 3 மணி நேரம் மின்சாரத்தடை ஏற்பட்டது. கோடை மழை காரணமாக, வெப்பம் குறைத்து, ஜில்லென்று குளிர் காற்று வீசியதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இன்றுறு காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நாமக்கல் மாவட்டத்தில் பதிவன மழையளவு விபரம்: மோகனூர் 34 மி.மீ., பரமத்திவேலூர் 1 மி.மீ., திருச்செங்கோட 1 மி.மீ., கொல்லிமலை 15 மி.மீ., மொத்தம் 51 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது.

Updated On: 10 April 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்