ராசிபுரத்தில் குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு விண்ணப்பிக்க 22ம் தேதி சிறப்பு முகாம்
ராசிபுரத்தில் குடிசை மாற்று வாரியத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகள் ஒதுக்கீடு கோரி விண்ணப்பங்கள் பெற 22ம் தேதி தேதி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
HIGHLIGHTS
ராசிபுரத்தில், குடிசை மாற்று வாரியத்தில் கட்டப்பட்டுள்ள, வீடுகள் ஒதுக்கீடு கோரி விண்ணப்பங்கள் பெற 22ம் தேதி தேதி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இது மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சி அணைப்பாளையம் திட்டப்பகுதியில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால், அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், 208 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
இக்குடியிருப்புகளுக்கு, பயனாளிகள் தேர்வு செய்ய தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்புவோர், வரும் 22ம் தேதி, ராசிபுரம் தாசில்தார் அலுவலகத்தில் நடக்கும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன், குடும்பத்தலைவர் மற்றும் உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் குடும்ப புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
பயனாளி, ராசிபுரம் நகராட்சிப்பகுதியில், வாடகை வீட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். வீடு ஒதுக்கீடு பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு பயனாளியும், அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட தொகை, ஒரு லட்சம் ரூபாய் முன் பணமாக செலுத்த வேண்டும். விருப்பம் உள்ள பயனாளிகள், முகாம் 22ம் தேதி காலை 10 மணி முதல் முதல், மாலை 50 மணி வரை, உரிய ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.