/* */

நாமக்கல் அருகே காரில் கடத்தப்பட்ட 1,350 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

நாமக்கல் அருகே காரில் கடத்தப்பட்ட 1,350 கிலோ ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

நாமக்கல் அருகே காரில் கடத்தப்பட்ட 1,350 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்
X

நாமக்கல் அருகே ரேசன் அரிசி கடத்தி வந்த, காரை போலீசார் பறிமுதல் செய்து, அதன் டிவைரை கைது செய்தனர்.

சேலம் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்.ஐ அகிலன், நாமக்கல் துணை தாசில்தார் ஆனந்தன், ஆர்ஐ சியாம் சுந்தர் மற்றும் போலீசார் சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பாச்சல் பிரிவு ரோடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அந்த வேனில் 50 கிலோ எடை கொண்ட 27 சாக்குப் பைகளில் சுமார் 1,350 கிலோ எடை கொண்ட ரேசன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து காருடன் ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

காரை ஓட்டி வந்த வரகூர் தாட்கோ காலனியை சேர்ந்த டிரைவர் ஜெகநாதன் (52) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரேசன் அரிசி எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து டிரைவர் ஜெகநாதனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 12 April 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  2. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  3. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  4. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  5. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை..!
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
  8. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  10. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...