/* */

புதுச்சத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்பு

புதுச்சத்திரம் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்கப்பட்டார்.

HIGHLIGHTS

புதுச்சத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்பு
X

புதுச்சத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர்.

புதுச்சத்திரம் அருகே உள்ள குள்ளப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பாவாயி (85). சம்பவத்தன்று காலை நடந்து சென்ற பாவாயி, அங்குள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தார்.

சுமார் 80 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில், 20 அடிவரை தண்ணீர் இருந்தது. பாவாயிக்கு நீச்சல் தெரிந்த போதிலும், அவரால் மேலே ஏறி வர முடியவில்லை. கிணற்றுக்குள் இருந்து அவர் தன்னை காப்பாற்றும்படி கூச்சலிட்டார். இதைக்கேட்ட அருகில் இருந்தவர்கள் ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

ராசிபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரசேகரன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர், கிணற்றுக்குள் இறங்கி கயிறு மூலம், உயிருடன் பாவாயியை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அவர் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Updated On: 23 April 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  2. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  3. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  4. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  5. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  6. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  8. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  9. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...