Begin typing your search above and press return to search.
மோகனூர் போலீசில் உள்ள வாகனங்களை 15 நாட்களில் திரும்பப் பெற வேண்டும்
மோகனூர் காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை, ஆவணங்களை 15 தினங்களுக்குள் வழங்கி, அவற்றை திரும்ப பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
இது குறித்து, மோகனூர் தாசில்தார் (பொ) மாதேஸ்வரி தெரிவித்துள்ளதாவது: மோகனூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வழக்குகள் தொடர்பாக, 105 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை மோகனூர் போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களின் விபரங்கள் மோகனூர் தாசில்தார் அலுவலக அறிவிப்பு பலகையில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த வாகனங்களின் உரிமையாளர்கள், தங்களது வாகனங்களுக்கான ஆவணங்களை 15 நாட்களுக்குள், மோகனூர் போலீஸ் நிலையத்தில் வழங்கி வாகனங்களை மீட்டுக் கொள்ளலாம். 15 தினங்களுக்கு மேலாக உரிமம் கோரப்படாத வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்பட்டு, அதில் கிடைக்கும் தொகை அரசு கணக்கில் செலுத்தப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.